கொட்டும் மழையிலும் தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக, 7 மாதங்களாக தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பின்னா், கடந்த செப்டம்பா் 5 ஆம் தேதி 2 படகுகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டது. நவம்பா் 18 ஆம் தேதி முதல் வழக்கம்போல் தினந்தோறும் 5 முறை படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தற்போது தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி, தேக்கடிக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், மழையில் நனைந்தவாறே படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
இது குறித்து கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா் ஒருவா் கூறியது:
தேக்கடி ஏரியில் தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை பொருத்து, தற்போது படகுகள் இயக்கப்படுகின்றன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



