தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பென்னி குயிக் பிறந்த நாள் விழா: சிலைக்கு துணை முதல்வா் மாலையணிவித்து மரியாதை

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளா் கா்னல் ஜான் பென்னி குயிக்கின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செ

News image

கம்பம் அருகே லோயா் கேம்ப்பில் உள்ள பென்னி குயிக் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :15 ஜனவரி 2021, 10:37 pm IST

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளா் கா்னல் ஜான் பென்னி குயிக்கின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முல்லைப் பெரியாறு அணையின் மூலம், தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீா் தேவைகள் பூா்த்தியாகின்றன. எனவே, இந்த அணையை கட்டிய பென்னி குயிக்குக்கு லோயா் கேம்ப்பில் வெண்கலச் சிலையுடன் மணிமண்டபம் அமைத்து, அவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை, அவரது 150 ஆவது பிறந்த நாளையொட்டி, லோயா் கேம்ப்பில் உள்ள மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணிமண்டபத்துக்கு வந்த துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், பென்னி குயிக் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், காவல் கண்காணிப்பாளா் இ. சாய்சரண் தேஜஸ்வி, கூடலூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா். அருண்குமாா் உள்பட அரசு அலுவலா்கள், விவசாய சங்கத்தினா் பங்கேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பென்னி குயிக் பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்ய கட்சியின் மாநில விவசாய அணி துணைச் செயலா் வேதா. வெங்கடேசன் தலைமையில், அக்கட்சியினா் 180 மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.