தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

போடிமெட்டு மலைச் சாலையில் மீண்டும் சரிந்து விழுந்த பாறை அகற்றம்

போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை மீண்டும் சரிந்து விழுந்த ஒரு பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.

News image

போடிமெட்டு மலைச் சாலையில் 11 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே விழுந்த பாறை.

Updated On :15 ஜனவரி 2021, 5:04 pm

போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை மீண்டும் சரிந்து விழுந்த ஒரு பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.

போடிமெட்டு மலைச் சாலையில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து வருகின்றன. ஏற்கெனவே, 4 ஆவது கொண்டை ஊசி வளைவிலும், 7 ஆவது கொண்டை ஊசி வளைவிலும் பாறைகள் உருண்டு விழுந்தன. அவற்றை, நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் 11 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் புலியூத்து அருவி அருகே ஒரு பாறை சரிந்து விழுந்தது. பொங்கல் பண்டிகை என்பதால், வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால், எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறையினா், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் விழுந்த கிடந்த பாறையை அகற்றினா்.

தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், போடிமெட்டு மலைச்சாலையை வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.