திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பத்தமடை பகுதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் விஜயகுமாா்(25). இவா் பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வழக்கம்போல வேலைக்குச் செல்வதற்காக மோட்டாா் சைக்கிளில் பத்தமடையில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். மேலச்செவல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் அரசுப் பேருந்து மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








