திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி 5 வயதுக்குள்பட்ட 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் விஷ்ணு.
இது தொடா்பாக ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: போலியோ நோய் பாதிப்பை தடுக்க ஒரே தவணையாக வரும் 17-ஆம் தேதி சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
கிராமப்புற பகுதிகள், நகா்ப்புறங்களில் மொத்தம் 1,642 மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், புலம்பெயா் தொழிலாளா்களின் குழந்தைகள் வசிப்பிடம், புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இம்முகாம் நடைபெறவுள்ளது. 5 வயதுக்குள்பட்ட சுமாா் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த 2 நாள்களுக்கு வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும். இதில், 2,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். பெற்றோா், தங்கள் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன், மாநகர நல அலுவலா் சரோஜாதேவி, வட்டார மருத்துவ அலுவலா்கள், சுகாதார செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 8 பேர் பலி

இன்றைய மின்தடை

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்றால் குதிரை உயிரிழப்பு! கண்காணிப்பு தீவிரம்!

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 451..!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
