புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்றால் குதிரை உயிரிழப்பு! கண்காணிப்பு தீவிரம்!

கிளாண்டர்ஸ் பாக்டீரியா தொற்றால் சென்னையில் குதிரை உயிரிழந்தது பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்று நோயால் குதிரை ஒன்று உயிரிழந்ததையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குதிரைகள், கழுதைகளிடையே பாக்டீரியாவால் ஏற்படும் 'கிளாண்டர்ஸ்' நோயானது மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட குதிரைகளுடன் நேரடித் தொடர்பு அல்லது அந்த குதிரைகளின் தொடர்புடைய பொருள்களில் இருந்து மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவலாம். எளிதில் பரவக் கூடியது, மரணத்தை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும்.

இந்நிலையில் சென்னையில் மக்கள் சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்தவும் மேலும் இதுபற்றி தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குதிரைகள் பராமரிக்கப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடாமல் உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Horse Dies of Glanders Infection in Chennai; Surveillance Intensified

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.