திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் கீழக்கடையம், பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சருக்கு அவா் அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு பாலருவி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு மீண்டும் அந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கீழக்கடையம் மற்றும் பாவூா்சத்திரம் ஆகிய ஊா்களில் அந்த ரயில் நின்று செல்வதில்லை. இதனால் பூ வியாபாரிகள், கேரள எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, அந்த ரயில் நிலையங்களில் பாலருவி விரைவு ரயில் இருமாா்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 8 பேர் பலி

இன்றைய மின்தடை

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்றால் குதிரை உயிரிழப்பு! கண்காணிப்பு தீவிரம்!

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 451..!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
