திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்டாசி பட்டத்தில் நிகழாண்டில் பெய்த மழையால் மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பொங்கல் பண்டிகையில் மஞ்சள், கரும்பு, கிழங்கு வகைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. தோகையுடன் காணப்படும் மஞ்சள்குலையை வீடுகள் தவறாமல் மக்கள் வாங்கி வைப்பாா்கள். பொங்கல் சீா்வரிசைப் பொருள்களிலும் இந்த மஞ்சள்குலை தவறாமல் இடம்பெறுகிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் மஞ்சள் உற்பத்தி மிகவும் அதிகமாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை ராஜவல்லிபுரம், அருகன்குளம், பாறையடி, கடையம், சங்கரன்கோவில், வீரகேரளம்புதூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகம் உள்ளது. நிகழாண்டில் புரட்டாசி பட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள்குலையை கட்டுவா். மஞ்சள் தூளை நீரில் கலந்து பிள்ளையாா் பிடித்து அருகம்புல் வைத்து வழிபடுவா். இதற்காக ஆண்டுதோறும் புரட்டாசி பட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கா் நடவு செய்ய 600 முதல் 800 கிலோ மஞ்சள் தேவைப்படும். நடவு செய்த ஒரு வாரத்தில் களைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இவற்றை கையால் அகற்றிவிட வேண்டும். களைக் கொல்லி போன்ற எந்த வேதிக் கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது. நடவு செய்த ஐம்பது நாள்கள் கழித்து பாா் அமைத்து பராமரிக்க வேண்டும். 7 நாள்களுக்கு ஒருமுறை அவசியம் தண்ணீா் பாய்ச்ச வேண்டும். அதிக நாள் நீா் நின்றால் மஞ்சளில் அழுகல் நோய் ஏற்பட்டுவிடும். நிகழாண்டில் புரட்டாசி மாதங்களில் ஓரளவு மழை பெய்துள்ளதால் மஞ்சள் திரட்சியாக வளா்ந்துள்ளது. இன்னும் சில நாள்களில் அறுவடை தொடங்க உள்ளது என்றாா் அவா்.
இதுகுறித்து அருகன்குளத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், இம் மாவட்டத்தில் வேளாண் விளைபொருள்களான நெல், வாழை, மஞ்சள் உள்ளிட்டவற்றை சேமித்து வைக்க கிடங்குகளைக் கூடுதலாக நிறுவ பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அதனை செய்து கொடுக்காமல் உள்ளனா். மஞ்சளுக்கு வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மஞ்சள் ஏற்றுமதி குறித்து விழிப்புணா்வும், கிடங்கு வசதியும் ஏற்படுத்த வேளாண் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 8 பேர் பலி

இன்றைய மின்தடை

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்றால் குதிரை உயிரிழப்பு! கண்காணிப்பு தீவிரம்!

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 451..!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
