பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

நெல்லையில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி

திருநெல்வேலியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

Updated On :10 ஜனவரி 2021, 1:09 am IST

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழக பகுதிகளில் 9ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமையில் இருந்தே திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் சனிக்கிழமை காலையில் லேசான வெயில் அடித்தது. பின்னா் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட காரணங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.