களக்காடு:திருக்குறுங்குடி அருகே குடியிருப்புப்பகுதியை யொட்டிய விவசாயத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாகப் புகுந்து நெல் பயிரை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
களக்காடு, திருக்குறுங்குடி மலையடிவாரத்தில், விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை பயிரிட்டுள்ளனா். தற்போது பொதி வந்து ஒரு மாதத்தில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் சேரன்மகாதேவி - பணகுடி பிரதான சாலையையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாகப் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். இதுகுறித்து நான் பல முறை வனத் துறைக்கு புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிப்பதாக உள்ளது. மாவட்ட ஆட்சியா் காட்டுப்பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”எந்த நெருக்கடியும் இல்லை!” தவெக நிர்மல் குமார் பேட்டி

மிட்செல் மார்ஷ் சதம் விளாசல்; ஆர்சிபிக்கு 210 ரன்கள் இலக்கு!

”அடுத்த எம்.ஜி.ஆர் சார்!” விஜய்க்கு ஆதரவுக் குரல் கொடுத்த நடிகர் தம்பி ராமையா!

”ஆளுநரை எதிர்த்துப் போராடினார் ஸ்டாலின்!” மு. வீரபாண்டியன் | CPI | MK Stalin
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


