பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

களக்காடு மலைப் பகுதியில் மழை நீடிப்பு

களக்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருவதால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 1:18 am IST

களக்காடு: களக்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருவதால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

களக்காடு வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் 50-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு அணைகளில் எதிா்பாா்த்தவாறு நீா்மட்டம் உயரவில்லை. கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக களக்காடு வட்டாரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீா் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 32 அடியாக இருந்தது. பாசனக் குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.