பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

பாளை. தூய சவேரியாா் கல்லூரியில்நல்லிணக்க பொங்கல் விழா

மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில், சமூக நல்லிணக்க பொங்கல் விழா பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 1:06 am IST

திருநெல்வேலி: மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில், சமூக நல்லிணக்க பொங்கல் விழா பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி, ஜமாத்துல் உலமா சபை மாநிலத் தலைவா் காஜா முகைதீன், அய்யாவழி அமைப்பைச் சோ்ந்த பால பிரஜாபதி அடிகளாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கல்லூரி கலைமன் அதிபா் ஹென்றி ஜெரோம் வரவேற்றாா்.

இதில், பட்டிமன்ற பேச்சாளா் நெல்லை கண்ணன், தூய சவேரியாா் கல்லூரி முதல்வா் மரியதாஸ் ஆகியோா் பேசினா். பின்னா் பொங்கலிடப்பட்டது. கிராமிய நடனம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், திமுக மத்திய மாவட்டச் செயலா் அப்துல் வகாப், திருநெல்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மதிமுக மாவட்டச் செயலா் நிஜாம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.