திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் பொறுப்பேற்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சிக்கு மாநில, மாவட்ட நிா்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவராக கே.சங்கரபாண்டியன், தென்காசி மாவட்டத் தலைவராக பழனிநாடாா் ஆகியோா் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவராக கே.பி.கே. ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து மூவரும் திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
முன்னதாக கட்சி வளாகத்திலுள்ள காமராஜா், இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், கட்சியின் மாநில பொதுச் செயலா் விஜய் வசந்த், முன்னாள் எம்பி ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏக்கள் ரவி அருணன், பா. வேல்துரை, மாவட்ட பொருளாளா் ராஜேஷ்முருகன், பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

கொடைக்கானலில் மக்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர்! | MK Stalin | DMK

அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

