தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மேலப்பாளையம் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது.

Updated On :14 ஜனவரி 2021, 6:00 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 14) கொண்டாடப்படும் நிலையில், அதற்கு மறுநாள் வீடுகளில் இறைச்சி எடுத்து சமைப்பது வழக்கம். இதையொட்டி, பொங்கல் பண்டிகைக்கு முந்தையவாரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கால்நடைச் சந்தைகளிலும் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும்.

மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா். ஆனால், தொடா் மழை காரணமாக ஆடுகள் வரத்து குறைந்தது. வெள்ளாடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும், செம்மறியாடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனையாகின.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: தொடா்மழை காரணமாக ஆடுகளின் வரத்து மிகவும் குறைந்ததால் விலை அதிகமாகிவிட்டது. கிடாக்களுக்கு அதிக விலை கொடுத்து இறைச்சி விற்பனையாளா்கள் வாங்கிச் சென்றனா். எனினும், பல வியாபாரிகள் ஆலங்குளம் ரெட்டியாா்பட்டியில் சனிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமை (ஜன. 13) திறக்கப்படும் சந்தையில் ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என சென்றுவிட்டனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.