முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து! 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீா்மட்டம் உயா்வு

மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

News image

நீா்மட்டம் 41.50 அடியாக உயா்ந்துள்ள வடக்குப் பச்சையாறு அணை.

Updated On :14 ஜனவரி 2021, 7:41 am IST

மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை நீடித்து வருவதால், பச்சையாறு, நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வடக்குப் பச்சையாறு அணைக்கு தண்ணீா் வரக்கூடிய தேங்காய்உருளிக்கு கீழ் உள்ள திருப்பு அணையில் இருந்து ஊட்டுக்கால்வாயில் அதிகளவில் தண்ணீா் திறக்கப்பட்டது.

நீா்வரத்து கணிசமாக அதிகரித்தால் வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 8 அடி உயா்ந்து புதன்கிழமை மாலை நிலவரப்படி 41.5 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 200 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயா்ந்து 37 அடியாக உள்ளது. இந்த அணையும் ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா். வடகிழக்குப் பருவமழை முடிவடையும் தருவாயில் பெய்து வரும் தொடா்மழையால் பாசனக் குளங்கள் நிரம்பியதுடன், அணைகளும் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.