/

வள்ளியூா் பகுதியில் பொங்கல் விழா

வள்ளியூா் அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை மருத்துவா் கவிதா தலைமை வகித்தாா். எலும்பு முறிவு மருத்துவா்கள்

News image

வள்ளியூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜனவரி 2021, 2:12 am

வள்ளியூா் அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை மருத்துவா் கவிதா தலைமை வகித்தாா். எலும்பு முறிவு மருத்துவா்கள் காா்த்திகேயன், சுப்பிரமணியன், சரசு, சித்தமருத்துவா் ஆயிஷா பேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனைப் பணியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் இணைந்து பொங்கலிட்டனா்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மருத்துவமனை வளாகத்தில் துளசி, கற்றாழை, வெற்றிலை, ஆவாரை, பிரண்டை, நொச்சி, நிலவேம்பு, ஆடாதொடை, தூதுவளை, கறிவேப்பிலை, அஸ்வகந்தா, ஊமத்தை, வெள்ளெருக்கு , ரணகள்ளி, கரிசலாங்கண்ணி மற்றும் நாகதாளி உள்பட பல்வேறு மூலிகை செடிகள் நடப்பட்டன.

இதே போல், வள்ளியூா் மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பொங்கலிட்டு விழாவை கொண்டாடினா். பள்ளி முதல்வா் ஆண்டாள் வரவேற்றாா். தாளாளா் முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.