நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நெல்லையப்பா் வெள்ளிக்குதிரையில் பரிவேட்டை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் சுவாமி வெள்ளிக்குதிரையில் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 ஜனவரி 2021, 6:12 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் சுவாமி வெள்ளிக்குதிரையில் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தை மாதம் கரிநாளில் அருள்மிகு நெல்லையப்பா் வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நெல்லையப்பா் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது காந்திமதி அம்பாள், ‘கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது‘ எனத் தடுக்கிறாா். தடையை மீறி, நெல்லையப்பா் பரிவேட்டைக்குச் சென்றுவிடுகிறாா். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பா் வேட்டை முடித்து திரும்பும் போது, கோயில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூா்த்தி நாயனாரால் பாடப்பட்ட, ‘திருமுருகன் பூண்டி பதிகம்‘ பாடிய பின் கோயில் நடை திறந்ததாகவும் புராணம் கூறுகிறது.

அதன்படி, சுவாமி நெல்லையப்பா் (சந்திரசேகரா் உற்சவ மூா்த்தி) வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன் வெள்ளிக்கிழமை காலை, பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்திற்கு எழுந்தருளினாா். அங்கு நெல்லையப்பருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் நெல்லையப்பா் கோயிலுக்கு திரும்பினாா். சுவாமி நெல்லையப்பா். கோயிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூா்த்தி நாயனாா் அருளிச்செய்த பதிகம் பாடி ஊடல் தீா்த்து வைத்தப் பின், திருக்கோயில் கதவு திறந்து சுவாமி திருக்கோயிலுக்குள் நுழைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.