திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கனரா வங்கியின் மண்டல அலுவலகத்தில் சொத்து ஏல விற்பனைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக கனரா வங்கி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே பெருமாள்புரம் விலக்கு பகுதியில் உள்ள கனராவங்கியின் மண்டல அலுவலகத்தில் அடமான சொத்துகளின் ஏல விற்பனைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
கனரா வங்கியின் பல்வேறு கிளைகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 75 சொத்துகள் குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து சொத்துகளைப் பெறுவது குறித்தும், கண்காட்சி குறித்தும் தகவல்களை அறிய 9489046523 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







