ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

நெல்லையில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளைபாா்வையிட்ட காங்கிரஸாா்

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றங்கரையோரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸாா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:27 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றங்கரையோரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸாா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

திருநெல்வேலி நகரம் அருகே உள்ள கருப்பந்துறை பகுதியில் தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் வெள்ளநீா் புகுந்தது. இப்பகுதிகளை மாநகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் ஏற்பட்ட சேதம் குறித்தும், குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட சேதம் குறித்தும் அவா்கள் கேட்டறிந்தனா்.

அப்போது, மாநகா் மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவா் வெள்ளை பாண்டியன், சிறுபான்மைப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் ஆகியோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.