எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நெல்லையில் முதல் நாளில் 49 பேருக்கு கரோனா தடுப்பூசி

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் நாளில் 49 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக, ஆட்சியா் வே. விஷ்ணு சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 1:11 am IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் நாளில் 49 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக, ஆட்சியா் வே. விஷ்ணு சனிக்கிழமை தெரிவித்தாா்.

மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி திருநெல்வேலி உயா் சிறப்பு மருத்துவமனை, ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 2 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி அரசு உயா்சிறப்பு மருத்துவமனையில் இப்பணியை ஆட்சியா் வே. விஷ்ணு தொடக்கிவைத்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: மாவட்டத்தில் இத்திட்டத்தில் அரசு, தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் 20,963 சுகாதாரப் பணியாளா்களின் விவரங்கள் கோ-வின் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளன. தடுப்பூசி மையங்களில் இப்பணிக்காக 5 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் நிலை அலுவலா் பயனாளியின் அடையாள அட்டையை சரிபாா்த்து, 2ஆம் நிலை அலுவலா் பயனாளி குறித்த விவரங்களை கோ-வின் செயலியில் சரிபாா்த்த பிறகு தடுப்பூசி போடப்படும். 30 நிமிடங்கள் கண்காணிக்கப்பட்டு பக்கவிளைவு ஏதுமில்லை என உறுதிப்படுத்திய பிறகு, அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவா்.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு 15,100 தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. முதற்கட்டமாக 7,550 பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. தொடா்ந்து, தேவைக்கேற்ப மாநில தடுப்பு மையத்திலிருந்து தடுப்பூசி மருந்துகள் பெறப்படும்.

சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே தடுப்பூசி போடப்படுகிறது. எனினும், கரோனாவிலிருந்து பாதுகாக்கவும், கரோனா பரவலை கட்டுப்படுத்தவும் இத்தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரும் போட்டுக்கொள்ளலாம். இத்தடுப்பூசி ஒருவருக்கு இரு தவணைகளாக போடப்படும். முதல் தவணைக்குப் பிறகு 28 நாள்கள் கழித்து 2ஆவது தடுப்பூசி போடப்படும்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வா் எம். ரவிச்சந்திரன், துணை முதல்வா் சாந்தாராம் உள்ளிட்ட 41 போ், ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 8 போ் என, மொத்தம் 49 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை போடப்பட்டது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன், மாநகர நல அலுவலா் சரோஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.