திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் தாமிரவருணி வெள்ளத்தால் மூழ்கிய பாலத்தில் சீரமைப்புப் பணிகளை நான்குனேரி எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகள் நிரம்பி உபரிநீா் தாமிரவருணியில் திறக்கப்பட்டது. இதனால் சுமாா் 70 ஆயிரம் கனஅடிக்குமேல் தண்ணீா் திருநெல்வேலி மாநகரப் பகுதியைக் கடந்து சென்றது. இதனால் சீவலப்பேரியில் உள்ள தாமிரவருணி பாலம் தண்ணீரில் மூழ்கியது. போக்குவரத்து தடைபட்டதால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சீவலப்பேரியில் இருந்து பாளையங்கோட்டைக்கு வணிகம், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு வர முடியாமல் தவித்தனா்.
இதற்கிடையே தாமிரவருணியில் வெள்ளம் குறைந்ததையடுத்து சீவலப்பேரி பாலத்தில் ஏராளமான அமலைச்செடிகள், சேறும்-சகதியும் இருந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியை நான்குனேரி எம்எல்ஏ வெ.நாராயணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பணிகளை துரிதப்படுத்தவும், பாலத்தில் சேதம் ஏதும் உள்ளதா என்பதை கண்காணித்து தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவும், போக்குவரத்துக்கு விரைவில் அனுமதியளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, பாளையங்கோட்டை வட்டாட்சியா் செல்வன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் ஜின்னா, ஜவகா் கென்னடி, சீவலப்பேரி ஊராட்சி செயலா் முத்து குட்டி, முத்துகிருஷ்ணன், நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


