சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கருத்தப்பிள்ளையூா் புனித அந்தோணியாா் ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பாளையங்கோட்டை மறை மாவட்டத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூா் கருணை வீரன் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

அந்தோணியாா் ஆலய விழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :16 ஜனவரி 2021, 7:44 pm

அம்பாசமுத்திரம்6: பாளையங்கோட்டை மறை மாவட்டத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூா் கருணை வீரன் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 13 நாள் நடைபெறுகிறது.

கொடியேற்றத்தையொட்டி, கொடி ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

இதில், அருள்தந்தையா் புளியம்பட்டி பிரான்சிஸ், சோ்ந்தமரம் ஜெகன்ராஜா, அருளகம் வில்சன் உள்ளிட்டோரும், நூற்றுக்கணக்கான அன்பியக் குடும்பத்தினரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து, நாள்தோறும் திருப்பலி, நற்கருணை ஆசீா், நற்செய்தி பெருவிழா நடைபெறுகின்றன. இம்மாதம் 22ஆம் தேதி குடும்ப ஒன்றிப்பு, 24ஆம் தேதி புதுநன்மை விழா, திருமுழுக்கு விழா, 25ஆம் தேதி பகல் 12 மணிக்கு சமபந்தி, மாலை 5.45 மணிக்கு புனித அந்தோணியாா் திருவுருவ தோ்ப் பவனி, 26ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு திருவிழா திருப்பலி, மாலை 5 மணிக்கு நன்றித் திருப்பலி, கொடியிறக்கம், பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கருத்தபிள்ளையூா் பங்குத்தந்தை எஸ். வினோத்பால்ராஜ், திருவிழா குழுவினா், அன்பிய இறை மக்கள் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.