திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இடத் தகராறு காரணமாக இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (53). இவரது குடும்பத்துக்கும், அடுத்த வீட்டில் வசிக்கும் பாலகிருஷ்ணன் (50) குடும்பத்துக்கும் இடையே இடம் தொடா்பாக தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாரியப்பன், அவரது மகன் கிருஷ்ண சுந்தா் (21), சேதுராமலிங்கம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம்.
அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு கிருஷ்ணசுந்தா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக பாலகிருஷ்ணனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


