சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருப்பத்தூரில் தெரு நாய்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு கோரிக்கை

திருப்பத்தூா் நகரில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :17 ஜனவரி 2021, 2:30 am

திருப்பத்தூா் நகரில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பல பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அவை அதிக அளவு சுற்றித் திரிகின்றன. வாகன ஓட்டிகள், பாதசாரிகளை நாய்கள் விரட்டுவதால் அச்சமடைந்துள்ளனா்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியது:

பஜாா் பகுதி மட்டுமின்றி பல தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தெருக்களில் அச்சத்துடனே நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடா்பாக நகராட்சியில் நேரிலும், கடிதம் மூலமும் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில நாள்களுக்கு முன்பு சாலையில் சுற்றித் திரிந்த பன்றிகள், மாடுகளை நகராட்சியினா் பிடித்தனா். அதேபோல், தெரு நாய்களைப் பிடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நகராட்சி துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினத்திடம் கேட்டதற்கு, இதுதொடா்பான புகாா் வந்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.