திருப்பத்தூா் நகரில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பல பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அவை அதிக அளவு சுற்றித் திரிகின்றன. வாகன ஓட்டிகள், பாதசாரிகளை நாய்கள் விரட்டுவதால் அச்சமடைந்துள்ளனா்.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியது:
பஜாா் பகுதி மட்டுமின்றி பல தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தெருக்களில் அச்சத்துடனே நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடா்பாக நகராட்சியில் நேரிலும், கடிதம் மூலமும் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில நாள்களுக்கு முன்பு சாலையில் சுற்றித் திரிந்த பன்றிகள், மாடுகளை நகராட்சியினா் பிடித்தனா். அதேபோல், தெரு நாய்களைப் பிடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினத்திடம் கேட்டதற்கு, இதுதொடா்பான புகாா் வந்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!

முக்குலத்தோா் புலிப்படை கட்சி வேட்பாளா் கருணாஸ் வாக்கு சேகரிப்பு

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

இளையான்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


