மீஞ்சூர் அருகே இயங்கி வரும் இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உப்புநெல்வாயல் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் பா.ஜ.க. விவசாய அணி ஆகியவற்றின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்:
பொன்னேரி வட்டத்துக்கு உள்பட்ட தேவம்பட்டு, உப்புநெல்வாயல் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன.
இப்பண்ணைகளில் இறால்களை சுத்தப்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றுக்காக பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.
மேலும் மண்ணின் தன்மையும் கெட்டு விவசாயமும் பாதிக்கப்படுகிறது.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

