அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்கக் கோரிக்கை

மீஞ்சூர் அருகே இயங்கி வரும் இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :2 மே 2013, 12:26 pm IST

மீஞ்சூர் அருகே இயங்கி வரும் இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உப்புநெல்வாயல் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் பா.ஜ.க. விவசாய அணி ஆகியவற்றின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்:

பொன்னேரி வட்டத்துக்கு உள்பட்ட தேவம்பட்டு, உப்புநெல்வாயல் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன.

இப்பண்ணைகளில் இறால்களை சுத்தப்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றுக்காக பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.

மேலும் மண்ணின் தன்மையும் கெட்டு விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.