இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மக்கள் தொடர்பு முகாம்: 37 பேருக்கு முதியோர் உதவித்தொகை

கும்மிடிப்பூண்டியை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:26 am IST

கும்மிடிப்பூண்டியை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

÷ முகாமுக்கு ஊராட்சித் தலைவர்கள் எஸ்.ஆர்.கண்டிகை பிரதாப்ரெட்டி, பாத்தப்பாளையம் ஜி.சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

÷ஒன்றியக்குழுத் தலைவர் குணம்மா கோபால்நாயுடு, எஸ்.ஆர்.கண்டிகை துணைத் தலைவர் முரளி, ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.÷வட்டாட்சியர் அப்துல்ரஹீம் வரவேற்றார். தனிவட்டாட்சியர் சித்ரா, துணை வட்டாட்சியர் சுமதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

÷முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 82 மனுக்கள் பெறப்பட்டன.

÷முகாமில் 37 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும், 3 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

÷வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.