என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

வேளாண் விதைப் பண்ணை கண்காணிப்பாளர் தற்கொலை

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு வேளாண் விதைப் பண்ணையில் பணிபுரிந்து வந்த கண்காணிப்பாளர் விஷம்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:25 am IST

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு வேளாண் விதைப் பண்ணையில் பணிபுரிந்து வந்த கண்காணிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

÷திருவள்ளூரை அடுத்த தக்கோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி (42).  கொழுந்தளூரில் உள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

÷இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், அஜய், கிஷோர் என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

÷தங்கமணிக்கு பிறவிலேயே கால் ஊனம் இருந்துள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓர் விபத்தில் அதே காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.÷இதனால் அவர் தினமும் வலியில் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை காலையில் கிராம மக்கள் விதைப் பண்ணைக்கு வந்துள்ளனர்.

÷அப்போது அங்கு தங்கமணி வாயில் நுரையுடன் இறந்து கிடந்ததாகத் தெரிகிறது.

÷ இது குறித்த புகாரின் பேரில், புல்லரம்பாக்கம் போலீஸார் அங்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

÷தங்கமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

÷மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.