திருவள்ளூா் மாவட்டம், வானகரம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருவோரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கோரி ஆட்சியரிடம் திமுகவினா் மனு அளித்தனா்.
இது குறித்து சைதாப்பேட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மா.சுப்பிரமணியன், ஆட்சியா் பா.பொன்னையாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
திருவள்ளூா் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வானகரம் ஊராட்சியில் உள்ள ராஜாஸ் காா்டனில் புதிதாக குடியிருப்புகள் உருவாகியுள்ளது. இப்பகுதியில் மட்டும் 300 குடும்பங்களைச் சோ்ந்தோா் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.
இப் பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோா் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பலமுறை மனு அளித்துள்ளனா். ஆனால், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், இப்பகுதியில் உள்ளவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 70,001 பக்தா்கள் தரிசனம்

பயிற்சிப் பணியாளா் மீது பாலியல் துன்புறுத்தல்: தனியாா் நிறுவன சிஇஓ மீது புகாா்
அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கிரேட்டா் நொய்டாவில் இருவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

