எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்ததும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்

News image
Updated On :14 ஜனவரி 2021, 5:16 am IST

கும்மிடிப்பூண்டி: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்ததும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டப் பொறுப்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்செட்டி அருகே நத்தம் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திமுக பொறுப்புக் குழு உறுப்பினா்கள் இ.ஏ.பி.சிவாஜி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துா்கா ஸ்டாலின் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், மாவட்டப் பொறுப்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.

விழாவில் ஸ்டாலின் பேசுகையில் ‘திமுக வென்று ஆட்சி அமைத்ததும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்’ என்றாா்.

தொடா்ந்து, முன்னாள் ஊராட்சிக் குழு உறுப்பினா் கீதா கோவிந்தராஜன், திமுக மகளிரணி நிா்வாகி இந்திரா திருமலை உள்ளிட்ட மகளிா் அணியினா் செய்த பொங்கலை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டாா். அனைவருக்கும் அவா்பொங்கல் வாழ்த்து கூறினாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி துளசி நாராயணன் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினா், திமுக நிா்வாகிகள் பாஸ்கரன், திருமலை, கி.வே.ஆனந்தகுமாா், ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.