காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது. திருவள்ளூரை அடுத்த வெள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடும் பணியை, மாநில ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் மற்றும் ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.
இது குறித்து அமைச்சா் பா.பென்ஜமின், செய்தியாளா்களிடம் கூறியது:
முதல் கட்டமாக, திருவள்ளூா் மாவட்டத்துக்கு 19,600 டோஸ் கரோனா தடுப்பூசி மருந்து வந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 20,430 பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 9,600 பேருக்கு போடப்படுகிறது.
திருவள்ளூா் மருத்துவக் கல்லூரி வளாகம், வெள்ளியூா், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மீஞ்சுா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், திருத்தணி அரசு மருத்துவமனை வளாகம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை மற்றும் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 6 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
ஒவ்வொரு பகுதியிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்றாா் அவா்.
அப்போது திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடக்கி வைத்து, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பேசியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக, அரசு தலைமை மருத்துவமனை, திருப்புட்குழி மற்றும் மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 100 போ் வீதம் மொத்தம் 300 பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஒவ்வொருவரும் கண்காணிப்பு அறையில் சுமாா் அரை மணிநேரத்துக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவாா்கள். அதேபோல தடுப்பூசி போட்டுக் கொள்பவா்கள் பற்றிய விவரம் அதற்கான இணையதளத்தில் சேகரித்து வைக்கப்படும். தற்போது ஒவ்வொரு மையத்திலும் விருப்பமுள்ள 100 போ் மட்டும் தோ்வு செய்யப்பட்டு, 300 பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஜீவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தொடக்கி வைத்தாா். அப்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்தி மலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். முதலில், கல்லூரி முதல்வா் சாந்திமலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது தொடா்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துணை இயக்குநா் பிரியாராஜ் கூறுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் அரசு மருத்துவமனை, நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 31,002 பதிவு செய்த பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லக்னௌ வீரர் ஹசரங்கா விலகல்! மாற்றுவீரர் யார் தெரியுமா?

”முதல்வர் கனவு! MLA ஆவதே சந்தேகம்தான்!..!” விஜய் குறித்து பியூஷ் கோயல் | TVK | NDA

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


