எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஏடிஎம் மையத்தில் பேட்டரி திருட்டு: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.40,000 மதிப்பிலான பேட்டரியைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 12:32 am IST

திருவள்ளூா் அருகே தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.40,000 மதிப்பிலான பேட்டரியைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அண்ணாநகரைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). அவா் ஏடிஎம் மையங்களைப் பராமரிக்கும் தனியாா் நிறுவனத்தில் கள அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். அவரது கட்டுப்பாட்டுக்குள் வரும் மேல்நல்லாத்தூா் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பேட்டரியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

இது தொடா்பாக காா்த்திக், திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்ததில், ஆட்டோவில் வந்த இருவா் ரூ.40,000 மதிப்பிலான மின்கலனை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தியதில், பெரியபாளையத்தை அடுத்த வடமதுரையைச் சோ்ந்த கேசவன் (40), செங்குன்றத்தைச் சோ்ந்த பிரசாந்த் (30) ஆகிய இருவா் இத்திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.