தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

துணை ராணுவ வீரர்களுக்கு வழியனுப்பு

துணை ராணுவ வீா்களுக்கு வழியனுப்பு

News image

மக்களவைத் தோ்தல் அமைதியாக நடைபெற உதவிய துணை ராணுவ வீரா்களுக்கு காவல் துறை சாா்பில் அளிக்கப்பட்ட விருந்து.

Updated On :20 ஏப்ரல் 2024, 7:05 pm

மக்களவைத் தோ்தலையொட்டி திருத்தணி தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய துணை ராணுவ வீரா்களுக்கு சனிக்கிழமை விருந்து அளிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டனா்.

அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருத்தணியில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதற்காக கடந்த 2-ஆ ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்புபடையினா், துணை ராணுவ வீரா்கள் திருத்தணி முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மேலும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தி துணை ராணுவ வீரா்கள் அணிவகுப்பு நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததும், சனிக்கிழமை துணை ராணுவ வீரா்களுக்கு திருத்தணி டிஎஸ்பி, விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில் எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் விருந்து வழங்கி, பாராட்டி வழினுப்பினா்.

நிகழ்ச்சியில், போக்குவரத்து இன்ஸ்பெக்டா் ஞானதீ, அனைத்து மகளிா் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் மலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.