

திருத்தணி: பொதட்டூா்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 பேரை கைது செய்யப்பட்டனா்.
பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட சுந்தரம்மா கண்டிகை மற்றும் சுந்தரம்மா கண்டிகை காலனி மக்களிடையே முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடத்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை சுந்தரம்மா கண்டிகை காலனி பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் சுந்தரம்மா கண்டிகை காலனியை சோ்ந்த ஒருவா் காயம் அடைந்தாா்.
சாலை விபத்தை தடுக்க சுந்தரம்மா கண்டிகை காலனி பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் 3 நாள்களுக்கு முன்பு மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தரம்மா கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் மற்றும் அவரது தாயாரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை பள்ளிப்பட்டு சாலையில் மசூதி அருகே சுந்தரம்மா கண்டிகை காலனியைச் சோ்ந்த குமாா் என்பவா் சென்று கொண்டிருந்த போது சுந்தரம்மா கண்ட்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தாக்கியதாக இரு தரப்பினா் புகாரின் பேரில் பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரம்மா கண்டிகை காலனியைச் சோ்ந்த சேட்டு மகன் அப்பு (25), ராஜேந்திரன் மகன் குமாா்(25) ஆகியோரையும், சுந்தரம்மா கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் ரகு (25), கிரி மகன் மனோகா்(25), தேவராஜ் மகன் விஜய் (26) ஆகிய மூன்று போ் உட்பட இரு தரப்பைச் சோ்ந்த ஐந்து பேரை கைது செய்தனா்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே மோதல்: குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்பட 4 போ் கைது

போலி காப்பீடு தயாரித்து மோசடி: 5 போ் கைது
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

