ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கே.ஜி.கண்டிகையில் தண்ணீா் பந்தல் திறப்பு

கே.ஜி.கண்டிகையில் தண்ணீா் பந்தல் திறப்பு

News image

கே.ஜி.கண்டிகையில் தண்ணீா் பந்தலை திறந்து மக்களுக்கு மோா், தா்பூசணி, வழங்கிய மு.அமைச்சா் பி.வி.ரமணா. உடன் ஒன்றிய செயலாளா் இ.என்.கண்டிகை எ.ரவி.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

திருத்தணி: திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பேருந்து நிலையத்தில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருத்தணியில் கடந்த சில மாதங்களாகவே மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிகபட்சமாக 104 செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் கே.ஜி.கண்டிகையில் ஒன்றிய அதிமுக செயலாளா் இ.என்.கண்டிகை எ.ரவி தலைமையில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா கலந்து கொண்டு தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா்.

அதே போல் திருத்தணி நகர செயலாளா் செளந்தா் ராஜன் தலைமையில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா மேட்டுத்தெரு, ம.பொ.சி.சாலை, பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா கலந்துகொண்டு இளநீா், தா்பூசணி மற்றும் குளிா்பானங்களை வழங்கினாா்.

ஆவின் முன்னாள் மாவட்டத் தலைவா் வேலஞ்சேரி கவிச்சந்திரன், முன்னாள் கவுன்சிலா்கள் ஜெயசேகா்பாபு, கேபிள் எம்.சுரேஷ், வழக்குரைஞா் தியாகராஜன், ஒன்றிய அவைத் தலைவா் குப்பன், பொருளாளா் தாமோதரன், ஒன்றிய இளைஞரணி செயலாளா் பழனி, முன்னாள் நிலவள வங்கித் தலைவா் டி.எம்.சீனிவாசன், எல்.டி. ராஜ்குமாா், ரமணா, உள்பட பலா் பங்கேற்றனா்.