தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

திருவள்ளூா்: 526 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு மாா்ச் 1-இல் வழங்க ஏற்பாடு

திருவள்ளூா்: 526 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு மாா்ச் 1-இல் வழங்க ஏற்பாடு

Updated On :27 பிப்ரவரி 2024, 6:35 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளுக்கும் 672 விளையாட்டு உபகரணங்கள் மாா்ச் 1- இல் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் தறை அலுவலா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விளையாட்டுத் துறை சாா்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பை வழங்குவதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கி.ஊ) மூலம் 672 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாவட்ட அளவில் விளையாட்டுக் கண்காணிப்பு குழு மற்றும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி மாா்ச் 1 -இல் சோழவரம் ஒன்றியம், பாடியநல்லூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆா்.காந்தி, ஆட்சியா் த.பிரபு சங்கா், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் சுதா்சனம் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.