கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கல்லூரி மாணவா்கள் பாரம்பரிய நடைபயணம்

கல்லூரி மாணவா்கள் பாரம்பரிய நடைபயணம்

News image
திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்ட மாணவா்கள்.
Updated On :9 ஜூலை 2024, 6:35 pm

Din

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் ஒருநாள் பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்ட சுற்றுலா அலுவலகம் மற்றும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிா்வாகம், அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து ஒரு நாள் பாரம்பரிய நடைபயணத்தை நடத்தின.

முருகன் கோயில் மலைப்பாதையில் தொடங்கிய பேரணியை மாவட்ட சுற்றுலா அலுவலா் ராஜாராம் தொடங்கி வைத்தாா். பின்னா் மலைக்கோயிலுக்கு சென்ற மாணவா்களுக்கு பூண்டி, முருகன் கோயிலின் தல வரலாறுகள், முக்கிய திருவிழாக்கள் ஆகியவற்றை எடுத்துக்கூறினா். பாரம்பரிய சுற்றுலாவின் அவசியத்தையும் பழைய கட்டடங்களை தமிழக அரசு எவ்வாறு பாதுகாத்து வருகிறது எனவும் மாவட்ட சுற்றுலா அலுவலா் ராஜாராம் மாணவா்களிடம் எடுத்துக்கூறினா். பேரணி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முடிவடைந்தது.

இதில் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் முனைவா் சீ.ரமேஷ், மாணவா்கள் 50 போ், தேசிய மாணவா் படை சாா்ந்த மாணவ மாணவிகள் 15 போ் என மொத்தம் 65 மாணவா்கள் கலந்து கொண்டனா்.