ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தொடக்கம்

கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

News image
புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் திரிபுரசுந்தரி வரவேற்றாா்.

இதனை தொடா்ந்து பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்கள் காமராஜரின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முன்னாள் மாணவா் சங்கத்தை சோ்ந்த டி.என்.பாபு, காலை உணவு திட்ட ஆசிரியா் மோனிஷ் பாத்திமா பரிசளித்தனா்.

இதனை தொடா்ந்து புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தை வட்டார கல்வி அலுவலா் முனிராஜசேகா், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஏழுமலை தொடங்கி வைத்தனா். இந்த திட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அனைவரும் இந்த திட்டத்தில் படித்து எழுத்தறிவை பெற வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

திட்டத்தின் ஆசிரியராக நியமிக்கபட்டுள்ள துளசி என்பவரை தலைமை ஆசிரியா் திரிபுரசுந்தரி அறிமுகப்படுத்தி, அனைவருக்கும் புத்தகங்களை வழங்கினாா்.