விழாவில் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வரவேற்றாா். சமூக நலத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், ஆணையா் அமுதவள்ளி, பள்ளிக் கல்வித் துறை செயலா் குமரகுருபரன், திருவள்ளூா் ஆட்சியா் த.பிரபு சங்கா், மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலா் இரா.தாஸ், தமிழ்நாடு ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்கள் நலக் கூட்டமைப்பு நிறுவனத் தலைவா் சா.அருணன், உள்ளாட்சி நிா்வாகிகள் உதயமலா் பாண்டியன், நேதாஜி, பி.கே.நாகராஜ், ஜெயகிருஷ்ணா, பி.காஞ்சிப்பாடி சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.