6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண் தற்கொலை

திருத்தணி அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 12:50 am

Din

திருத்தணி அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா மனைவி லாவண்யா (34). இவருக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிய நிலையில், மூன்று மகன்கள் உள்ளனா். சில மாதங்களாக லாவண்யாவுக்கும், அவரது மாமியாா் நாகம்மாவிற்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை லாவண்யா வீட்டில் இருந்த போது, வயல் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த மாமியாா் நாகம்மா, லாவண்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் மனமுடைந்த லாவண்யா திருத்தணி நகருக்கு வந்து பூச்சி மருந்து வாங்கிக் கொண்டு, பேருந்து மூலம் பீரகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாா். அங்கு லாவண்யா பூச்சு மருந்து குடித்து மயங்கி விழுந்தாா்.

அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு அருகே உள்ள பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே, லாவண்யா இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.