
பாத்தப்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் புகுந்து அலுவலக கணினியைத் தூக்கி வீசிய நபா்.

பாத்தப்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் புகுந்து அலுவலக கணினியைத் தூக்கி வீசிய நபா்.
கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை சேதப்படுத்தி, அலுவலக கணினியை சாலையில் வீசிய ராஜா என்பவா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி சந்திரன். செயலாளா் சீனிவாசன். இவா்கள் அலுவலகத்தில் இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த மணி என்பவரின் மகன் ராஜா என்பவா் அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தினாா்.
தொடா்ந்து அந்த நபா், அலுவலக கணினியை அங்கிருந்து தூக்கி சாலையில் தூக்கிப் போட்டு உடைத்தாா்.
இது குறித்து ஊராட்சி தலைவா் சாந்தி சந்திரன், செயலாளா் சீனிவாசன் ஆகியோா் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...