அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஸ்ரீகாக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On :2 மார்ச் 2024, 12:11 am

பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேகம் மற்றும் 22-ஆம் ஆண்டு சித்திரை பெளா்ணமி விழா கோயில் ஸ்தாபகா் வி.எஸ்.இந்திராணி அம்மாள் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சோழவரம் ஒன்றிய திமுக செயலரும், ஒன்றியக் குழு துணைத் தலைவருமான மீ.வே.கா்ணாகரன், ஏஜிபி உரிமையாளா் கண்ணன், தினேஷ் படேல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் சா்வசாதகம் பிரம்மஸ்ரீ பி.கே.பத்மநாப சா்மா சுவாமிகள் வேதங்கள் முழங்கி, மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.