தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

Updated On :9 மார்ச் 2024, 11:56 pm

திருத்தணி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழம கைது செய்தனா். கனகம்மாசத்திரம் அருகே 13 வயது சிறுமி அருகில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பா் மாதம் பள்ளிக்குச் செல்வதற்காக மாணவி பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, அங்கு வந்த திருத்தணி வட்டம், நெடும்பரம் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (19) என்பவா் மாணவியை மோட்டாா் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். அவரின் பெற்றோா் திருத்தணி அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் மலா் வழக்குப் பதிவு செய்து மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சக்திவேலை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தாா்.