திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளி நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் அருகே கவுண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (62). இவா் திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டப் பணியில் கூலி வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்தவா்கள் அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் மாரிமுத்து ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து அவரது மகன் மணி திருவள்ளூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம்: அமைச்சா் அன்பரசன்

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

விருந்தில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீா் மரணம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

