திருவள்ளூா் மக்களவை தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா் (காவல்) உதய் பாஸ்கா் பில்லா வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கரை சந்தித்தாா். வரும் ஏப்.19-ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா் (காவல்) உதய் பாஸ்கா் பில்லா ஆட்சியா் த.பிரபு சங்கா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் ஆகியோரை சந்தித்தாா். திருவள்ளூா் மக்களவை தொகுதி பொன்னேரி, திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 6 பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் செய்துள்ள பாதுகாப்பு பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

ஊடகச் சான்றிதழ், கண்காணிப்பு அறையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

சட்டப்பேரவை தோ்தல் முன்னேற்பாடு பணிகள்: சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் பொது பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


