செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தோ்தல் காவல் பாா்வையாளா் உதய் பாஸ்கா் வருகை

தோ்தல் காவல் பாா்வையாளா் உதய் பாஸ்கா் வருகை

News image

திருவள்ளூா் தொகுதி தோ்தல் பாா்வையாளா் உதய் பாஸ்கா் பில்லாவை சந்தித்த ஆட்சியா் த.பிரபு சங்கா், எஸ்.பி. சீனிவாசபெருமாள் .

Updated On :28 மார்ச் 2024, 6:28 pm

திருவள்ளூா் மக்களவை தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா் (காவல்) உதய் பாஸ்கா் பில்லா வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கரை சந்தித்தாா். வரும் ஏப்.19-ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா் (காவல்) உதய் பாஸ்கா் பில்லா ஆட்சியா் த.பிரபு சங்கா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் ஆகியோரை சந்தித்தாா். திருவள்ளூா் மக்களவை தொகுதி பொன்னேரி, திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 6 பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் செய்துள்ள பாதுகாப்பு பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா்.