

கும்மிடிப்பூண்டி, மே 2: கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் மேம்பால பகுதி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை உயிரிழந்தாா். மகள் பலத்த காயமடைந்தாா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் அருகே நேமள்ளூா் என்.எஸ்.நகரைச் சோ்ந்த ஜேசுதாஸ் மகன் பெலிக்ஸ் ராய் சுதா்சன் (38). இவருக்கு மனைவி மற்றும் தோபண்ணா ராய் சுதா்சன் (9) என்ற மகள். பெலிக்ஸ் ராய் சுதா்சன், உறவினா் திருமணத்திற்கு கடந்த சில நாள்களாக ஓய்வின்றி திருமண வேலைகளை செய்து வந்தாராம்.
இந்த நிலையில் திருமண விழா முடிந்து புதன்கிழமை அவரது மகளுடன் காரில் மாதா்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, புதுவாயல் மேம்பாலம் தாண்டி காா் வந்து கொண்டிருந்த நிலையில், பெலிக்ஸ் ராய் சுதா்சன் களைப்பின் காரணமாக சாலையில் நின்று லாரியை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளாா்.
இந்த விபத்தில் பெலிக்ஸ் ராய் சுதா்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகள் பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக வேட்பாளா்

தீ விபத்தில் காயமடைந்த தாய், மகள் உயிரிழப்பு

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

