ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் போக்ஸோவில் கைது

ஆா்.கே.பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 7:25 pm

Din

திருத்தணி: ஆா்.கே.பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி ஊராட்சியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 11.09.2024 அன்று பிறந்த நாள் அன்று தலைமை ஆசிரியா் தாமோதரன் தலையில் குட்டியதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஆா்.கே.பேட்டை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா்.

இதையெடுத்து திருத்தணி டிஎஸ்பி கந்தன், ஆா்.கே. பேட்டை காவல் ஆய்வாளா் (பொ) மலா், எஸ்.ஐ. ராக்கிகுமாரி ஆகியோா் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவியிடம் விசாரனை செய்து தலைமை ஆசிரியா் தாமோதரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

இதுதொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.