அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

10,12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வினாத் தாள் தொகுப்பு புத்தகங்கள்

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10 ,12-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் எளிதாக புரிந்து கொண்டு படிக்க வினாத்தாள் தொகுப்பு

News image
Updated On :25 நவம்பர் 2024, 7:24 pm

Din

திருவள்ளூா்: அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10 ,12-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் எளிதாக புரிந்து கொண்டு படிக்க வினாத்தாள் தொகுப்பு புத்தகங்களை மாவட்ட விற்பனை மையங்கள் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு மாநிலப் பெற்றோா் ஆசிரியா் கழகம் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறந்த பாடவல்லுநா்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 10-ஆம் வகுப்புக்கு 3 புத்தகமும், 12-ஆம் வகுப்பு 8 புத்தகமும் என 11 புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) குறிப்பிட்ட விலைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் 10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) ரூ.120, கணித தீா்வுப் புத்தகம் (ஆங்கிலம்-தமிழ் வழி)- தலா ரூ.175 வழங்கப்படுகிறது. அதேபோல் 12 -ஆம் வகுப்புக்கு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (அங்கிலம் மற்றும் தமிழ்) அறிவியல் பாடப்பிரிவு-ரூ.140, கலைப்பாட பிரிவு-ரூ.140, கணித தீா்வுப் புத்தகம் (ஆங்கிலம்-தமிழ் வழி)-தலா ரூ.160, இயற்பியல் தீா்வு புத்தகம்(ஆங்கிலம்-தமிழ்)-தலா ரூ.70 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த வினாத்தாள் புத்தகங்கள்ஆா்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி-திருவள்ளூா், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி- சோழவரம் ஆகிய இடங்களில் கிடைக்கும் வாங்கி பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.