பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருவள்ளூா்: ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

திருவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா்.
Updated On :16 செப்டம்பர் 2024, 8:08 pm

DIN

திருவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இதில் மொத்தம் 222 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா், 5 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், நோ்முக உதவியாளா் (தோ்தல்) சத்யபிரசாத், கோட்டாட்சியா் கற்பகம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் தனலட்சுமி, ஆதிதிராவிடா் நல துறை அலுவலா் செல்வராணி, தாட்கோ மாவட்ட மேலாளா் ர. சரண்யா, தமிழ்நாடு தூய்மை பணியாளா் நல வாரியம் மாநில துணை தலைவா் செ.கனிமொழி பத்மநாபன், மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.