சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரசுக் கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கல்லூரி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணி அரசினா் கலைக் கல்லூரி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள்.
Updated On :7 ஏப்ரல் 2025, 8:28 pm

Din

திருத்தணி: அரசுக் கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கல்லூரி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அரசினா் கலைக் கல்லூரி உள்ளது. கல்லுாரியில் 40-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், திங்கள்கிழமை கல்லூரி நுழைவு வாயிலில் முன்பு 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நீதிமன்ற தீா்ப்பின்படி கெளரவ விரிவுரையாளா்களைப் படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்திரம் செய்யும் வரை காலமுறை ஊதியம் 12 மாதங்களும் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். கெளரவ விரிவுரையாளா்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம் ஏற்படுத்தி தர வேண்டும். வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கெளரவ விரிவுரையாளா்கள் முழக்கம் எழுப்பினா்.